search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "worldcup"

    • முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 50 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 229 ரன்கள் எடுத்தது.
    • 230 ரன்கள் வெற்றி இலக்குடன் இங்கிலாந்து அணி விளையாடி வருகிறது.

    உலக கோப்பை கிரிக்கெட் போட்டிகள் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகின்றன. இந்நிலையில், உத்தர பிரதேசத்தின் லக்னோவில் உலக கோப்பை தொடரின் 29-வது லீக் ஆட்டத்தில் இந்தியா- இங்கிலாந்து அணிகள் மோதி வருகின்றன.

    டாஸ் வென்ற இங்கிலாந்து பவுலிங் தேர்வு செய்தது. அதன்படி, முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 50 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 229 ரன்கள் எடுத்தது.

    தொடர்ந்து, 230 ரன்கள் வெற்றி இலக்குடன் இங்கிலாந்து அணி விளையாடி வருகிறது.

    இந்நிலையில், பரபரப்பாக நடைபெற்று வரும் இந்த போட்டியை இந்திய கிரிக்கெட் வீரர் எம்.எஸ்.தோனி தனது மனைவி சாக்ஷியுடன் நேரில் கண்டு ரசித்து வருகிறார்.

    இதன் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

    கேட்கும் திறன் மற்றும் பார்வை இல்லாத நபர் நண்பரின் உதவியால் உலகக்கோப்பை கால்பந்து போட்டியில் தனது நாட்டு அணியின் வெற்றியை கொண்டாடிய நெகிழ்ச்சி நிகழ்வு நடந்துள்ளது. #FIFA #WorldCup
    போகோடா:

    உலகக்கோப்பை கால்பந்து போட்டிகள் ரஷியாவில் நடந்து வருகின்றது. கடந்த வாரம் நடந்த குரூப் போட்டியில் கொலம்பியா - போலந்து அணிகள் மோதின. இந்த போட்டியில், கொலம்பியா அணி 3-0 என்ற கணக்கில் வென்றது. இந்நிலையில், இந்த போட்டி நடந்த அன்று கொலம்பியா தலைநகரில் நடந்த ஒரு உணர்ச்சிமிகு நிகழ்வு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

    கொலம்பியா அணியின் தீவிர ரசிகரான ஜோஸ் ரிச்சர்ட், 9 வயதில் தனது பார்வை மற்றும் கேட்கும் திறனை இழந்தவர். போட்டி நடந்த அன்று போகோடா நகரில் உள்ள கிளப்பில் ஆஜரான ஜோஸுக்கு அவரது நண்பர் போட்டியை டிவி.யில் பார்த்து விளக்கியுள்ளார். கால்பந்து மைதானம் போன்ற சிறிய அட்டையை மடிப்பகுதியில் வைத்து, ஜோஸின் இரு கைகளையும் பிடித்து அவரது நண்பர், பந்து போகும் திசையை சுட்டிக்காட்டி விளக்கியுள்ளார்.

    பவுல், பெனால்டி, கோல் என ஒவ்வொரு நிகழ்வுக்கும் சிறப்பு சங்கேத சைகைகள் மூலம் ஜோஸின் நண்பர் விவரித்துள்ளார். கொலம்பியா அணி கோல் அடித்ததும் உணர்ச்சி பெருக்கால் ஜோஸ் கூச்சலிடும் காட்சிகள் நெகிழ வைக்கின்றன. வீடியோ கீழே..


    ×